11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

Share

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் சிமித் நாணயக்கார அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அனுராதபுரம் மாநகர சபை பகுதியில் உள்ள 30 முக்கிய இடங்களில் ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பிப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்தின் நாய்களில் சுமார் 80% நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இத்திட்டம் நகர மையத்திலிருந்து படிப்படியாக 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கவில்லை என்றாலும், அநுராதபுரம் மாநகர சபை, ஜஸ்டிஸ் ஃபோர் எனிமல்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைய முடிந்தது என்று வைத்தியர் சிமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...