tamilni 427 scaled
இலங்கைசெய்திகள்

மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Share

மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு க்கோரியுள்ளது.

இந்த காலகட்டத்தில், இரண்டு ஏர்பஸ் ஏ330 விமானங்கள் பல நாட்கள் சேவையில் ஈடுபடாமையால் விமான நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

உலகளாவிய விநியோக பற்றாக்குறை மற்றும் பாரிஸில் டயர் வெடித்த சம்பவம் என்பன ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சவால்களாக அமைந்துள்ளன.

அதே நேரத்தில், இரண்டு உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தவிர்க்க முடியாத விமான இரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த நிலையில், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதோடு அண்மையில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இரண்டு யு320 விமானங்கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட இயந்திரங்களுடன் சேவைக்குத் திரும்ப உள்ளதோடு ஏர் பெல்ஜியத்தின் காப்புப்பிரதி யு330 இந்த வார இறுதியில் வரவிருக்கிறது.

அத்துடன், சேவைகளில் ஈடுபடாமல் இருந்த இரண்டு விமானங்களும் மீண்டும் சேவைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...