இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

Share

இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

நேற்று (20.07.2023) வரை 714,598 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை 20 நாட்களில் மட்டும் 90,724 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையாக 15,330 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

10,184 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5963 பேரும், ஜேர்மனியிலிருந்து 5141 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு முழுவதும் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...

world 73
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி டிக்சன் சந்திப்பில் துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

காலி, டிக்சன் சந்திப்பு பகுதியில் இன்று (மே 12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

world 72
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெனியாய கல்வி வலயப் பள்ளிகள் நாளை மீண்டும் திறப்பு: சுகாதார நடவடிக்கைகள் நிறைவு

தெனியாய கல்வி வலயத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு முக்கிய பாடசாலைகளும்...