world 73
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி டிக்சன் சந்திப்பில் துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

Share

காலி, டிக்சன் சந்திப்பு பகுதியில் இன்று (மே 12) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர், காலி கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவர் இலக்கு வைக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டதுடன், காயமடைந்தவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிரிழந்தவர் குறித்த மேலதிக விபரங்களைச் சேகரிக்கும் பணியில் காலி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்திப்பு பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய கார் மற்றும் அவர்களது அடையளம் குறித்துத் துப்பு துலக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயலாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் மோதல்களுக்கும், இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காலி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...