Untitled 1 35 scaled
இலங்கைசெய்திகள்

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க தயாராகும் இலங்கை

Share

சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்து போராட, இலங்கை தனது வெளிநாட்டு கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்த ஒரு வருடத்தின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இருதரப்பு கடனளிப்பவர்கள் சீனாவுக்காக காத்திருக்கும் நிலையிலும், பலதரப்பு கடன் வழங்குபவர்கள் அதே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சீனாவின் வலியுறுத்தல்களாலும், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தற்போது முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்போது ஒரு வார காலப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார்.

எனினும் இதுவரையில், இலங்கையின் கடன் நிவாரணக் கோரிக்கை குறித்த சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை பலரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...