tamilni 462 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை

Share

இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாவுக்கு எதிராகவும், இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை விமான நிலையங்களை வழங்குவதற்கும் தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இலங்கையை இந்தியமயமாக்கக் கூடாது என்று அரசாங்க எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும், இலங்கை படிப்படியாக இந்தியமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுமானால் அதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது இலங்கை இந்தியாவின் 29வது மாநிலமாக மாறுவதையோ நாங்கள் எதிர்க்கிறோம்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களுக்கு விமான நிலையங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். விமான நிலையம், நாட்டிற்குள் நுழையும் உணர்வுபூர்வமான இடமாகும்.நாட்டின் விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்றினால் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்,” என்றார்.

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ETCA) இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்று கூறிய எம்.பி., இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

“இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது என்றால் நாங்கள் எதிர்க்கிறோம். இதன் மூலம் இந்தியர்கள் வேலை வாய்ப்புக்காக நாட்டிற்குள் நுழைய முடியும். இந்தியாவில் 44 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 200,000 மருத்துவர்கள் இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 1.5 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள், 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியர்களை இலங்கையில் வேலை தேட அனுமதிப்பது இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்,” என்றார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...