6 27
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகள்

Share

இலங்கையில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகள்

ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக மாறியுள்ளார்.

நடந்து முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் தனித்துவமான விடயமாக இது மாறியுள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியில் இருக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

அரசியலமைப்பை திருத்தியமைத்து மூன்றாவது தடவையாக போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச போட்டியிட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலால் வெற்றிடமாக இருந்த இடத்திற்கு ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார்.

மக்கள் வாக்குகளால் அல்லாமல் அரசியலமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருந்தபோது தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் பட்டியலில் மகிந்தவுடன், ரணிலும் ரணில் இணைந்துள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...