2 51
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்படவுள்ள பெரும் குழப்ப நிலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையில் ஏற்படவுள்ள பெரும் குழப்ப நிலை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது குழப்ப நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறாவிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, உலக ஒழுங்கை பேணுவதற்கு சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் வைத்திருக்க வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24 1
உலகம்செய்திகள்

இந்தியாவின் பிரம்மோஸ் அல்லது அமெரிக்காவின் Tomahawk… எது மிகவும் சக்திவாய்ந்த குரூஸ் ஏவுகணை

நவீன காலகட்டத்தில் நடத்தப்படும் போர்களில், குரூஸ் ஏவுகணைகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் வகையில் உருவெடுத்துள்ளன. குரூஸ்...

22 5
உலகம்செய்திகள்

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகத்...

25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது...

21 5
உலகம்செய்திகள்

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு – கல்லாக மாறிய அதிசய நிகழ்வு

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு, கால்சியம் கல்லாக மாறியுள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த 82...