3 48
அரசியல்இலங்கைசெய்திகள்

6 மாதங்கள் மட்டுமே அனுரவால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்: ஹிருணிக்காவின் எதிர்வுகூறல்

Share

6 மாதங்கள் மட்டுமே அனுரவால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்: ஹிருணிக்காவின் எதிர்வுகூறல்

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றால் ஆறு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும்.

கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என நான் அப்போதே கூறியிருந்தேன். அதுவே உண்மையானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்யாத மிக சுத்தமான அரசியல்வாதி என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...