மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம்
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம்

Share

மகிந்தவின் அணியில் இருந்து ரணிலுக்கு ஆதரவுக் கரம்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்ட போது தமது எதிர்கால அரசியலை கருத்திக் கொண்டு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஒரு தரப்பினர் ஹெலிகொப்டர் சின்னத்தில் அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

ஹெலிகொப்டர் சின்னத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடவில்லை. கூட்டணி பிளவடைந்துள்ளது.

எம்மை விட்டு விலகி சென்ற டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையினர் மீண்டும் எம்முடன் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளார்கள். விலகிச் சென்றவர்கள் தாராளமாக எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம்.

சவால்களுக்கு மத்தியிலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது. ஆகவே எதிர்வரும் காலங்களில் தோற்றம் பெறவுள்ள சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், எமக்கும் இடையில் அரசியல் ரீதியில் வேறுபாடு காணப்படலாம் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை சவால்களை தைரியமாக வெற்றிக் கொண்டார். ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...