24 66233a4cdea04
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா

Share

இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா

இலங்கையிலுள்ள கடல்களுக்கு ‘நீலக் கொடி கடற்கரைகள்’ சான்றிதழை பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த சான்றிதழை பெரும்பொருட்டு இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இருபத்தெட்டு (28) கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுவதனால் அந்த நிபந்தனைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இலங்கைக்குப் பின்னர் இந்த முயற்சியை ஆரம்பித்த இந்தியா, ஏற்கனவே எட்டு கடற்கரைகளுக்கான ‘நீலக்கொடி கடற்கரைகள்’ சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், அதேசமயம், சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக தாம் ஆரம்பித்த திட்டத்தை இலங்கை இன்னும் ஆரம்பிக்கவில்லை என கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் உரிய தலைவர் வலியுறுத்தினார்.

நீலக் கொடி சான்றிதழானது கடற்கரைகள், மெரினாக்கள் மற்றும் நிலையான சுற்றுலாப் படகுகளுக்கான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ விருதுகளில் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...