3 35
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Share

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

நாட்டில் கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

 

இதனால், மக்கள் கலவரமடையத் தேவையில்லை, தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று (22) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் கூறியதாவது, கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கவில்லை.

 

எவ்வாறிருப்பினும், நாம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம்.

 

கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றன. புதன்கிழமை 42,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளன.

 

எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...