16 23
இலங்கைசெய்திகள்

அடையாள அட்டை தொலைந்தவர்கள் மற்றும் புதிதாக பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

Share

அடையாள அட்டை தொலைந்தவர்கள் மற்றும் புதிதாக பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய அடையாள அட்டை பெறப்பட்டால், வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியம் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

தொலைந்து போன அடையாள அட்டையை மீண்டும் பெற காத்திருப்பவர்கள், பெயர் மற்றும் தங்கள் முகவரி மாற்றப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை தொலைந்தமைக்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு, பொலிஸ் அறிக்கையுடன் திணைக்களத்திற்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...