16 23
இலங்கைசெய்திகள்

அடையாள அட்டை தொலைந்தவர்கள் மற்றும் புதிதாக பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

Share

அடையாள அட்டை தொலைந்தவர்கள் மற்றும் புதிதாக பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய அடையாள அட்டை பெறப்பட்டால், வயதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் அவசியம் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

தொலைந்து போன அடையாள அட்டையை மீண்டும் பெற காத்திருப்பவர்கள், பெயர் மற்றும் தங்கள் முகவரி மாற்றப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை தொலைந்தமைக்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு, பொலிஸ் அறிக்கையுடன் திணைக்களத்திற்கு வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...