1 10
இலங்கைசெய்திகள்

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு – கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

Share

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு – கடற்றொழில் அமைச்சரின் அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும்.

அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...