2 13
இலங்கைசெய்திகள்

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

Share

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

புதிய சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்தும் பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஒரு பொறுப்பான கட்சியாக செயற்பட வேண்டும். வெளிப்படையாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது.

இவர்கள் செய்தது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது தொடர்பாக எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

செவ்வாய்கிழமை (17) எதிர்க்கட்சியிலிருந்தும் சபாநாயகர் பதவிக்காக பெயர் ஒன்றை முன்மொழிவோம் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அடுத்த சபாநாயகராக திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் நபரின் மீதும் நம்பிக்கை இல்லை. இதில் பலத்த சந்தேகம் உள்ளது.

அடுத்த முறை நம்மை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாற்றப்பட்டு அவரை ஆதரித்தோம். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தினத்தில் எதிர்க்கட்சியில் இருந்தும் பெயரை கண்டிப்பாக முன்மொழிவோம். ஆனால் முன்மொழியப்படுபவர் தவறான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவரில்லை” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...