tamilnih 1 scaled
இலங்கைசெய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

Share

தாய்லாந்திற்கு விஜயம் செய்த இலங்கையர்கள் குழுவொன்று நாடு திரும்ப முடியாமல் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் தங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் குழுவை இலங்கைக்கு அழைத்து வரவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டமையே இதற்கு காரணம்.

ஊடகத்திடம் பேசிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் இருந்த இலங்கைப் பெண் ஒருவர், இந்த நாட்டிற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 01:55க்கு சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை சுற்றுலா பயணிகள் குழு மீண்டும் பேங்கொக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் மீண்டும் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 01:10க்கு கட்டுநாயக்கவிற்கு செல்லவிருந்த விமானமும் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...