dd 1
இலங்கைசெய்திகள்

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

Share

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

2025 ஆம் ஆண்டில்  சிறிலங்கா விமானப்படை(sri lanka air force) ஒன்பது புதிய விமானங்களைப் பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து(us) எட்டு பெல் 206 உலங்கு வானூர்திகளும் பாகிஸ்தானில் (pakistan)இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானமும் கிடைக்கவுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கா எட்டு TH-57 சீ ரேஞ்சர் பெல் 206 உலங்கு வானூர்திகளை விமானப்படைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிறிலங்கா விமானப்படையின் விமானத் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திககள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜெட் விமானம் கிடைக்கும் என்றும், விமானப்படை கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானமும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் (australia)இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானமும் கிடைத்தன.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...