rtjy 29 scaled
இலங்கைசெய்திகள்

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

Share

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

60 வயது நிரம்பிய வைத்திய நிபுணர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி 176 வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.சி.பி.எஸ்.மோரோயஸ் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மனுவொன்றின் மூலம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...