30e3c3e2 b3895777 urea
இலங்கைசெய்திகள்

விரைவில் தேசிய அரச உரக் கொள்கை

Share

பயிர்ச்செய்கைக்காக இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய அரச உரக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (13) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

அதன்போது, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் முன்மொழிவுக்கு அமைய குழுவால் தேசிய கொள்கைக்காக 35 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

நெற்பயிற்செய்கையில் எவ்வளவு இரசாயன மற்றும் சேதன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விவசாய வல்லுநர்கள் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என்றும், அந்த சதவீதத்தின் அடிப்படையில், தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களின் அளவை தீர்மானிக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரச உரக் கொள்கையொன்றை வகுக்கும் போது விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உர உற்பத்திகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வசதியாக உரம் வழங்கும் செயல்முறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு உணவு பாதுகாப்புக் குழுவிடம் அமைச்சர் கூறினார்.

முன்மொழிவுகளை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகளாக அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....