14 30
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

Share

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...