15 30
இலங்கைசெய்திகள்

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

Share

சர்வதேச கிரிக்கட் சம்மேளன 2024 விருதுக்கான முதல் தேர்வு பட்டியலில் இலங்கை வீரர்

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் ஐசிசி விருதுகள் 2024இன் முதல் தேர்வுப்பட்டியல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்தத் தேர்வுப்பட்டியலில் எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் 2024 டிசம்பர் 29 மற்றும் 30 திகதிகளில்; ஐசிசி விருதுகள் 2024க்கான ஏழு தேர்வுப்பட்டியல்கள் வெளியிடப்படவுள்ளன.

வெற்றியாளர்களை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் முக்கிய குழு தேர்வு செய்யும். பின்னர் ,இது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான போட்டியில் நான்கு வலுவான போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன்,பாகிஸ்தானின் சைம் அயூப், மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப் மற்றும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இணைந்துள்ளனர்

ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்க அனைத்துத்துறை வீராங்கனை; அன்னெரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி, இந்தியாவின் சி;ரேயங்கா பட்டீல் மற்றும் அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் 12 விருதுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...