14 30
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

Share

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...