24 6650da2ea612f
இலங்கைசெய்திகள்

எல்.பி.எல் மோசடிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் தொடர்பில்லை

Share

எல்.பி.எல் மோசடிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் தொடர்பில்லை

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேவா விதானகே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் பணிப்பாளர் மற்றும் ஏனைய கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரிகள் ஆட்ட நிர்ண சதிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், மோசடிகளுடன் தொடர்பு பட்டிருப்பதாகவும் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் நேர்மையான முறையில் போட்டித் தொடரை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாகவே மோசடிகள் குறித்த விசாரணைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தம்புள்ள அணி தொடர்பான எழுந்த சர்ச்சைகளின் போதும் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளாக சுட்டிக்காட்டியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...