rtjy 73 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

Share

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும் தொடர்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஎன்பிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

முன்னைய நிலவரத்தையும் தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. அத்துடன் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் மேலும் சிலவற்றின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. பங்குச் சந்தை விலைக் குறியீடும் நேர் பெருமானத்தில் இருப்பதைக் காணலாம்.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் பாதியில் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் சுமார் 300 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாகன இறக்குமதி தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதும் அதற்கான முடிவினை எடுக்கும் சாதகமான சூழல் தற்போது இல்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டியிருப்பதாகவும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து கூறப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...