tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு

Share

ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷாவிடம், இலங்கை அரசு முறைப்படி மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் சீரழிவுக்கு ஜெய் ஷாவை குற்றம் சாட்டிய ரணதுங்கவின் கருத்துக்கள், அவரிடம் இந்த மன்னிப்பை கோர வைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இலங்கை கிரிக்கெட்டை மிதித்து கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தையால்தான் அவர் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.” என்று ரணதுங்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கருத்துக்களுக்காக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் மன்னிப்பு கோரியிருந்தனர்.

மேலும், கிரிக்கெட் விவகாரங்களுக்கான பொறுப்பு வெளிப்புற தாக்கங்களை விட இலங்கை நிர்வாகிகளிடமே உள்ளது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...