3 40
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

Share

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

கடந்த அரசாங்கங்களின் போது முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்கள் பயன்படுத்திய பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விற்பனை செய்வது அல்லது பொது ஏலத்தில் விற்று பணத்தை திறைசேரிக்கு வரவு வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக முன்கெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்துடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்கள், அரச அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்திய பெருந்தொகையான சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த சொகுசு வாகனங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்களினால் பயன்படுத்தப்பட்டவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி செயலகம் ஊடாக பணம் செலவிட்டிருந்தது.

5 கோடி முதல் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொகுசு வாகனங்கள், அரசியல்வாதிகளால் நீண்ட காலமாக முறைசாரா வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யவும் அல்லது வெளிநாட்டிற்கு பொது ஏலத்தில் விற்று, பொது நலனுக்காக திறைசேரிக்கு பணத்தை வைப்பிடவும் அரசின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...