24 6620b3e235cb1
இலங்கைசெய்திகள்

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

Share

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

இலங்கையின் போர் வெற்றியை நினைவு கூறும் சமயத்தில் கனடா தலைவர்கள் கொண்டுவரும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கையின் இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்தமாதம் இலங்கையில் போர் வெற்றியை நினைவுகூறுதல் தொடர்பான கலந்துரையாடல்களின் போதே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023), கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கனேடியத் தூதுவரை வரவழைத்தது.

இந்த விடயத்தில் இதற்கு முன்னர் இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்முறையும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மீண்டும் இடம்பெறுமா என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

போரின் போது இலங்கையில் நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...