24 6620cd11248aa
இலங்கைசெய்திகள்

நாட்டில் தக்காளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

நாட்டில் தக்காளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் (Dambulla economic centre) ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகக் குறைந்திருந்தாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிலையத்தில் வியாபாரிகள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததாலேயே விலை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாகக் குறைந்திருந்த போதிலும், நேற்று (17) புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ போஞ்சியின் விலை 40 ரூபா வரையும், ஒரு கிலோ முள்ளங்கியின் விற்பனை விலை 35 ரூபா வரையும், ஒரு கிலோ கெக்கரி மற்றும் வெள்ளரிக்காயின் விற்பனை விலை 20 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, ஒரு கிலோ பீக்கங்காயின் விலை 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், பயிற்றங்காய், பொலஸ் மற்றும் புடலங்காய் ஆகியவற்றின் மொத்த விலை தலா 50 ரூபாவாகவும் குறைந்துள்ளன.

நேற்று புறக்கோட்டை (Petta) சில்லறை விற்பனைச் சந்தையில் காய்கறிகளுக்கான தேவையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...