32 6
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியன்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

Share

சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியன்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? சுய நிர்ணய உரிமையை எப்படி பாவிப்பது? என்பதை பற்றி சுமந்திரனின் எடுபிடியக செயற்படும் சாணக்கியனிடம் கேட்க விரும்புகிறேன் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் தங்களது தலைவிதி எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதே பொதுமக்கள் வாக்கெடுப்பு.

சாணக்கியனுக்கு தற்போது 60 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதை விட மேலாலும் கீழாலும் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது இவர்களால் முடியாது என்று கூறப்பட்டது.

முப்படைகளையும் கொண்டு வந்து, ஒரு நடைமுறை அரசாங்கத்தை கட்டி எழுப்பி, இன்று சர்வதேச ரீதியில் கொண்டுவரக் கூடிய அளவிற்கு போராட்டம் வளர்ந்தது.

அதுபோலத்தான் ஆரம்பத்தில் முடியாது என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் சரி வராது.

இனப்படுகொலை இடம்பெற்றது, சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையை இன்று எத்தனையோ நாட்டு பிரதமர்கள் பேசும் அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா காங்கிரஸிலேயே ஒரு சுதந்திரத்துக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என்று 10 பேருடன் ஒரு தீர்மானம் வந்திருக்கிறது. அந்தத் தீர்மானம் நிறைவேறும் என்பதற்கு அனுசரணையாகவும் சாதகமாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...