இலங்கையில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி நிரப்பும் ஆலை அமைப்பதற்கு சீனா கவனம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இலங்கை தூதுவர் டாக்டர் பாலித கொஹோனவுடானவுக்கும் இடையேயான சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது,
சினோபார்ம் தடுப்பூசி 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர், இத் தடுப்பூசியை 50 க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டோருக்கு இதுவரை எதுவித விளைவுகளும் ஏற்பட்டன எனபதிவுகள் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment