train tours 10 sri lanka
இலங்கைசெய்திகள்

ஓட்டுனர்கள் பற்றாக்குறை – ரயில்கள் ரத்து

Share
ஓட்டுனர்கள் பற்றாக்குறையினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் இதுவரையில் திருப்திகரமான மறுமொழிகள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட 20 ற்கும் அதிகமான ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றமையே இந்த நிலைக்குப் பிரதான காரணம் எனவும் இது தொடர்பாக அரச அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அநுராதபுரம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பதுளைக்கு செல்லும் நீண்ட தூர ரயில் சேவைகள், சரக்கு மற்றும் எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் மற்றும் திருகோணமலைக்கு கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் எதிர்காலத்தில் பல ரயில்களை ரத்து செய்ய நேரிடும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...