Medicines
இலங்கைசெய்திகள்

150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

Share
நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின், மெட்ஃபோர்மின், இதய நோயாளிகளுக்கான அஸ்பிரின்,  குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1, 300 அத்தியாவசிய மருந்துகளில் 140 முதல் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிட்டதாகவும் அந்த மருந்துகளை பிரதியீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், சில வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மருந்துப் பற்றாக்குறையால் சத்திரசிகிச்சைகள் சில இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...