செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரியாலை பகுதியில் துப்பாக்கி சூடு! – ஒருவர் படுகாயம்

sl army
Share

மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் மீது இன்று மாலை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார். படுகாயமடைந்த அவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் அரியாலை முள்ளியைச் சேர்ந்த யசிந்தன் (வயது – 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, குறித்த உழவு இயந்திரம் மணல் ஏற்றிய பெட்டியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...