8 40
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானில் கொடூரம் : பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

Share

பாகிஸ்தானில் கொடூரம் : பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு

பாகிஸ்தானில் (Pakistan) பேருந்தொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு பேருந்தொன்று சென்றுள்ளது.

இந்தநிலையில், பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆயுதமேந்திய கும்பல் குறித்த பேருந்தை இடைமறித்துள்ளது.

பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய குறித்த கும்பல் அடையாள அட்டைகளை சோதித்துள்ளது.

இதையடுத்து, அதில் ஏழு பயணிகள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஏழு பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....