சந்திரிக்கா காலம் குறித்து பெருமைப்படும் சிராணி!-

Chirani Bandaranaike and Chandrika

ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவி வகித்த போது, உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது;

‘நாட்டில் நான் மதிக்க கூடிய மிகவும் சொற்பளவிலான நபர்களில் முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சிறப்பிடம் பெறுகிறார். சேவையினை அடிப்படையாகக் கொண்ட பொது நிகழ்வுகளிலும், பதவிப் பிரமாணங்களின் போதும் சந்தித்துள்ளேன்.

1993 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டேன்.

ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு அவர் நீதித்துறைக்கு உயர்மட்ட நிலையினை வழங்கினார். நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க வழங்கிய ஒத்துழைப்பு அளப்பெரியது என்றும் தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version