Sanakkiyan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வீடுகளை நிர்மாணிப்பதில் பாரபட்சம்! – சாணக்கியன் குற்றச்சாட்டு

Share

வடக்கு, கிழக்கில், நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், “நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., “இந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதி அமைச்சர், “குறித்த வீடுகளுக்கு 6 இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

எனினும், வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...