kaje
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! – சபையில் கஜேந்திரன்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..

2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...