sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜெனிவாவில் கடும் நெருக்கடி இலங்கைக்கு!

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்டது. அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஜெனிவா தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும். ”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று (26) தெரிவித்தார்.

“நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரசல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதமும் அது நீக்கப்படும்வரை சட்டம் 0பயன்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.” எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

” எனினும் உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும். போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டம் போதுமானது. வன்முறை என்பது தவறுதான். ஆனால் எல்லா வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கையாக அமையாது குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் அலுவலகங்கள் தாக்கப்படும் அது பயங்கரவாத நடவடிக்கையா?” எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

போராட்டக்களத்தில் இருந்த முன்கள போராளிகள் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வேட்டையாடப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். அவசரகால சட்டத்தை மாதாந்தம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் நீடிக்க வேண்டும். சிலவேளை 20நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்பதற்காகவும் வழங்கிய வாக்குறுதியை மறந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுத்துள்ளது அரசு. என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...