nanthinixavier 7878
இலங்கைசெய்திகள்

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Share

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமாகியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் செயற்பட்டவர்.  இலக்கியத்துறை மற்றும் சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்.

1967 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் தடம்பதித்து கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக் கட்டுரை என தனது பல ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் சிறுகதை இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அத்துடன் இவரின் படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் கலாபூசணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...