tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

Share

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

ஆட்சியைப் பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய இனவாத நாடகத்தின் இரண்டாவது பாகத்தைத் தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 என்கின்றனர், 13 பிளஸ் என்கின்றனர். இவை யாவும் போலியான வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஜனாதிபதி கனவில் உள்ள சிலர், தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், சுகபோக வாழ்வுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனர்.

2019 இல் மக்களை எவ்வாறு ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார்களோ அதன் இரண்டாவது பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இனவாத ரீதியிலான பிரசாரங்கள் இதன் ஓர் அங்கமாகும். இனவாதம், மதவாதம் பரப்பி ஆட்சியைப் பிடித்தவர்களை மக்கள் விரட்டியடித்தனர் என்பதை நினைவில் வைத்துச் செயற்பட்டால் சிறந்தது.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...