இலங்கைசெய்திகள்

அரிசி பதுக்கி வைத்த களஞ்சியசாலைகளுக்கு ‘சீல்’!!

Tamil News large 252415620200420041947
Share

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தலைமையிலான குழுவால் நேற்றுமுன்தினம் (25) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, பொலநறுவை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட நெல் களஞ்சியசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட சுமார் 20 களஞ்சியசாலைகள் இன்று சுற்றிவளைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

சவளக்கடை பகுதியிலுள்ள பாரிய நெல் களஞ்சியசாலையொன்றும் இதில் அடங்குகின்றது.

பியர் உற்பத்திக்காக சுமார் 30 லட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சுற்றிவளைப்பு குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...