12 38
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

Share

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்(foreign employment bureau) பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு நாடு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சிறப்பு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளி வசிக்கும் பகுதியில் உள்ள இலங்கை(sri lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை அலுவலகம், ஒரு மாணவருக்கு சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான வவுச்சரை வழங்கும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அலுவலரிடமிருந்து பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் இரண்டு வழிமுறைகள் மூலம் வழங்கப்படும், 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை அரசுப் பாடசாலைகளில் படிக்கும் பெற்றோர் தற்போது வெளிநாட்டில் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும், 5 வருடங்களுக்கும் குறையாமல் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...