மூன்று நாட்களுக்கு மட்டுமே அடுத்தவாரம் பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும் நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்நிலை ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, திங்கட்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகள் மூன்று நாட்களும், ஏனைய பாடசாலைகள் ஐந்து நாட்களும் திறக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment