அரசியல்இலங்கைசெய்திகள்

சஷியின் பிணை மனு நாளை வரை ஒத்திவைப்பு!

sashi
Share

போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.

போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தார்.

தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை இன்று வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவன்ச இன்று காலை நீதிமன்றில் முன்னிலையானார்.

இதன்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...