போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.
போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தார்.
தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை இன்று வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவன்ச இன்று காலை நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டது.
#SriLankaNews
Leave a comment