tamilni 23 scaled
இலங்கைசெய்திகள்

பெருந்திரளானோரின் கண்ணீருடன் யாழ்ப்பாணம் பயணமாகும் சாந்தனின் பூதவுடல்

Share

பெருந்திரளானோரின் கண்ணீருடன் யாழ்ப்பாணம் பயணமாகும் சாந்தனின் பூதவுடல்

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

GalleryGalleryGallery

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...