24 663e58341853e
இலங்கைசெய்திகள்

யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!

Share

யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறையில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான கைத்தொழில் பூங்காவை (Industrial Park) நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

கனடாவில் (Canada) உள்ள இலங்கையர்களுடன் இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் அரச சீமெந்து தொழிற்சாலை உள்ள 700 ஏக்கர் காணியில் இந்த கைத்தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முதலீட்டாளர்கள் சுமார் 500 மில்லியின் டொலர்களை வழங்கவுள்ளனர்.

கனடாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோர் கைத்தொழில் பூங்காவை அமைப்பதற்கான பாதை மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்வார்கள்.

இந்த பூங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்ப்பதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...