tamilni 643 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

Share

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் இணைந்து தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்டவர்களுள் பேரறிவாளனும் ஒருவராவார்.

குறித்த வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலையானதில் பாரிய பங்கு அவரது தாயார் அற்புதம்மாளுக்கு உண்டு. பேரறிவாளனின் விடுதலைக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களுக்கு சாந்தன் குடும்பத்தார் கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர் நாட்டுக்கு திரும்பும் தருணத்தில் உடல் நிலை மோசமடைந்து நேற்று காலை சென்னையில் உயிரிழந்தார்.

தற்போது சென்னையில் உள்ள சாந்தனின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வரும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அஞ்சலி செலுத்தியதுடன், சாந்தனின் உடலைக் கண்டு கதறி அழுதுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...