23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

Share

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25 ) குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்புகளின் தரச் சான்றிதழ்களை ஆய்வு செய்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக, 100க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்திலிருந்து தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உப்பு கொள்கலன்கள் அனுப்பப்படுவதாகவும், உப்பு அதன் தரச்சான்றிதழ்கள் போன்றவற்றைச் சரிபார்த்த பிறகு சேமிப்பு வளாகங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்! | Salt Import Sri Lanka

அதேவேளை, கடுமையான வெப்பம் உப்பு உருகுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், சில கொள்கலன்களில் இருந்து உப்பு உருகி வெளியேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உப்பு மட்டுமல்ல, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றையும் கொண்ட கொள்கலன்களை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், அவை விரயமாகும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சில உணவுப் பொருட்கள் குளிர்சாதன பெட்டி கொள்கலன்களில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், அந்தக் கொள்கலன்கள் துறைமுக வளாகத்தில் சுமார் இரண்டு நாட்கள் இருக்கும்போது, ​​கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் என்றும் சனத் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை உணவுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தாலும், துறைமுகத்திற்கு வெளியே உள்ள கொள்கலன் ஆய்வுப் புள்ளிகளில் போதுமான இடவசதி மற்றும் போதுமான அதிகாரிகள் இல்லாததால் கொள்கலன்கள் துறைமுக வளாகத்திற்குள் சிக்கிக் கொள்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...