முடியாவிட்டால் நாம் தயார் - சஜித்
அரசியல்இலங்கைசெய்திகள்

முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்

Share

முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்

அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றால் அந்த பேச்சுவார்த்தையில் தலையீடு செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அது நாட்டுக்கு நலனை ஏற்படுத்தியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்த காரணத்தினால் தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...