முடியாவிட்டால் நாம் தயார் - சஜித்
அரசியல்இலங்கைசெய்திகள்

முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்

Share

முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்

அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றால் அந்த பேச்சுவார்த்தையில் தலையீடு செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அது நாட்டுக்கு நலனை ஏற்படுத்தியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்த காரணத்தினால் தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....